தன்பாலீர்ப்பினர் மீதான வெறுப்பு மற்றும் பாரபட்சம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கும், அமா திஸாநாயக்கவுக்கும் எதிரான EQUAL GROUND க்கு ரிட் மனுவைத் தொடருவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

இன்று புதன்கிழமை (08 டிசம்பர் 2021),பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, கண்டி எல்லையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன அழஹகோன் மற்றும் உத்தேசிக்கப்பட்ட ஆலோசகரும் பயிற்சியாளருமான அமா திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக EQUAL GROUND மற்றும் பலர் தாக்கல் செய்த மனுவைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இப்பயிற்சியின் போது இலங்கையில் உள்ள தன்பாலீர்ப்பின பெண்கள்தன்பாலீர்ப்பின ஆண்கள்ஈர்பாலீர்ப்பினர்கள்திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் புதுமையர்கள்/வினவினர் (LGBTIQ) சமூகத்தின் உரிமைகளை மீறும் வகையிலும் பாகுபாடு காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

இம் மனுவை ஆதரித்த பிறகு, நீதியரசர்களான சோபித ராஜகருண மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கான ஆதாரப்பூர்வ காரணம் இருப்பதாக அறிவித்ததுடன், மனுவில் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

EQUAL GROUND க்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் மேலும் ஏனைய  மூன்று ஆர்வமுள்ள LGBTIQ தரப்பு மனுதாரர்கள் தாக்கல் செய்த மனு மூலம், அவர்களையும் இடைநிலை மனுதாரர்களாக சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கையில் LGBTIQ மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்பட்டதன் தொடர்பில் ஒரு அமைப்பினால் சட்ட அமலாக்கத்திற்கு சவால் விடப்பட்ட ஒரு வழக்கு இலங்கையில் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். 

Equal GROUND ஆனது LGBTIQ உரிமைகளுக்காக துணை வலுகொடுத்து வாதிடும் இலங்கையின் மிகப் பழமையான அமைப்பு, சக நபர்களுடன் இணைந்து LGBTIQ சமூகத்தைப் பற்றி தவறான மற்றும் பாரபட்சமான கருத்துக்களுடன் சமூகத்தினருக்கு தீங்கிழைக்கும் வகையில், காவல்துறைக்கு பயிற்சித் திட்டத்தை நடத்தியதற்கு மேற்கூறிய பிரதிவாதிகளுக்கு எதிராக ஒரு தடை உத்தரவின் (Prohibition) தன்மையில் ஒரு ஆணையைக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த வருட நவம்பர் மாதத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜூலை 2021 இல் நடைபெற்ற இப்பயிற்சி நிகழ்ச்சியில் பேசும் போது, இலங்கையில் வாழும் “தன்பாலீர்ப்பினர்கள்” மற்றவர்களை, குறிப்பாக இளைஞர்களைக் குறிவைத்து, அவர்களையும் LGBTIQ சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்ற முயற்சிப்பதாக திஸாநாயக்க அவர்கள் கூறியுள்ளார்கள்.  மேலும் LGBTIQ நபராக இருப்பது இயற்கைக்கு மாறானது என்றும் உயிரியல் மற்றும் சமூக விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார், ஏனெனில் இத்தகைய உறவுமுறைகள் இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்காது என்று கூறியது மட்டுமல்லாது, பங்கேற்பாளர்கள் அத்தகைய உறவுகளுக்கு எதிரானவர்கள் என்று உரத்த குரலில் சத்தமாக பதில் கூறும்படி பங்கேற்பாளர்களிடம் கேட்டுமுள்ளார். 

இப்பேற்பட்ட பயிற்சிகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் போன்றவற்றை இலங்கை காவல்துறை நடத்துவதைத் தடுக்கும் தடை உத்தரவை (Prohibition) மனுதாரர்கள் கோருகின்றனர்.  இது இலங்கையில் உள்ள எல்லா LGBTIQ மக்களின் அடிப்படை உரிமைகளை ஓரங்கட்டுகிறதாயும் மீறுகிறதாயும் இருக்கின்றது.  வெவ்வேறு பாலியல் நாட்டங்கள் மற்றும் பாலின அடையாளங்கள் / வெளிப்பாடுகள் கொண்ட தனிநபர்களை இழிவுபடுத்துதல், மனிதாபிமானமற்றதாக்குதல் மற்றும் ஓரங்கட்டுதல் ஆகியவற்றுக்கு இணக்கம் தெரிவிப்பதும், அனுமதிப்பதும் அடிப்படை மனித உரிமைக்குப் பொருத்தமற்றதும் அரசியலமைப்பின் 12 வது பிரிவை மீறும் வகையிலும் உள்ளது.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன அவர்கள் ஆஜராகியுள்ளார்.

மறுமொழி இடவும்